அபாய கட்டத்தில் தமிழகம்.. கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்கியது.. உச்சக்கட்ட பாய்ச்சல் கொலை நடக்கத்தில் பொதுமக்கள்

By vinoth kumarFirst Published Jun 10, 2020, 6:21 PM IST
Highlights

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1927ஆக உயர்ந்துள்ளதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,841ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1927ஆக உயர்ந்துள்ளதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,841ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஏழை, பணக்காரர் என்று பாராமல் வெறித்தனமாக தாக்கி வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது.  ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. அதேவேளையில் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் எவ்வளவு பாதிப்பு என்பது தொடர்பாக தினசரி அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்படுகிறது. 

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,927 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  36,841ஆக உயர்ந்துள்ளது. 

இதில், சென்னையில் மட்டும் 1,392 பேர் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 25,937ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 1008ஆக உள்ளது. எனவே குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19,333ஆக அதிகரித்துள்ளது. இன்று 19 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 326ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 10வது நாளாக பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

தமிழகத்தில் 1,927 பேர் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்ராவில் இருந்து தமிழகம் வந்த 8 பேருக்கும், பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!