"சென்னையை மூன்றாக பிரிச்சு விடுங்க " - முன்னாள் துணை மேயரின் அதிரடி கோரிக்கை

By Asianet TamilFirst Published Aug 21, 2019, 10:55 AM IST
Highlights

சென்னை மாநகராட்சியை நிர்வாக வசதிக்காக மூன்றாக பிரிக்க வேண்டும் என்று முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் வேண்டுகோள்  விடுத்துள்ளார் .
 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு நேற்று 75 வது பிறந்தநாள்  . இதற்காக சைதாப்பேட்டை சின்னமலையில் இருக்கும் அவரது சிலைக்கு முன்னாள் சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்களுடன் வந்து மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்.

பின்னர் செய்தியர்களை சந்தித்த அவர் கூறியதாவது :

16 சட்டமன்ற தொகுதிகளும் 155 வார்டுகளும் இருந்த சென்னை மாநகராட்சி மு.க. ஸ்டாலின் துணை முதல்வராக  இருந்த போது திருத்தி அமைக்கப்பட்டு 22 சட்டமன்ற தொகுதிகளும் , 200 வார்டுகளுமாக மாற்றப்பட்டது . அப்போது மேயராக மா . சுப்ரமணியன் இருந்தார் .

அந்த நேரத்தில் மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் என்னிடம் , "நான் மத்திய உள்துறை மந்திரியாக இருந்த காலக்கட்டத்தில் டெல்லி மாநகராட்சியை மூன்றாக பிரித்து நிர்வாகத்தை சீரமைத்து கொடுத்தேன். அதேபோல, சென்னை மாநகராட்சியையும் மூன்றாக பிரித்து நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்” என்றார்.

அவரின் யோசனையை மு.க. ஸ்டாலினிடம் கொண்டு சென்றேன் . அதன்படி, இப்போது ராஜீவ்காந்தியின் பிறந்த நாளில் பெருநகர சென்னை மாநகராட்சியை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

இவ்வாறு கராத்தே தியாகராஜன் கூறினார் .

click me!