ரூ.80தை நெருங்கும் பெட்ரோல் விலை..! கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!

By Manikandan S R SFirst Published Jan 5, 2020, 10:39 AM IST
Highlights

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்படுகிறது. சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 09 காசுகள் உயர்ந்து 78.48 ரூபாயாக இருக்கிறது. தொடர்ந்து நான்காவது நாளாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல 1 லிட்டர் டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து 72.39 ரூபாயாக இருக்கிறது. டீசல் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. பெட்ரோல் விலை 80 ரூபாயை நெருங்கும் அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. அதன் காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வந்தது. அதன்பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இடையிடையே விலை குறையவும் செய்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிடுகிடுவென உயர்வது வாகன ஓட்டிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

click me!