இனி போலீசாருக்கு விடுமுறை கிடையாது.. டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு..!

By vinoth kumarFirst Published Mar 10, 2021, 1:52 PM IST
Highlights

சட்டமன்ற தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது என டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சட்டமன்ற தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது என டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 12-ம் தேதி தொடங்குகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ம் தேதி வெளியாகிறது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த  நாட்களே உள்ளதால் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை வேட்பாளர் தேர்தவில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனால், போலீசார் வாகன சோதனை உள்ளிட்ட கூடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றமான பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்புகளை நடத்தினர்.

இந்நிலையில், தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை என்று  டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்;- சட்டப்பேரவை தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை. அவசர தேவை என்றால் மட்டுமே விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

click me!