சென்னைக்கு அருகே நிவர் புயல்... சென்னையில் வெளுத்து வாங்கும் மழை..!

Published : Nov 24, 2020, 09:06 AM IST
சென்னைக்கு அருகே நிவர் புயல்... சென்னையில் வெளுத்து வாங்கும் மழை..!

சுருக்கம்

வங்கக் கடலில்  உருவான நிவர் புயல் சின்னம் சென்னையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று உருவானது. இன்று அது நிவர் புயலாக உருவெடுத்தது. தற்போது சென்னையில் இருந்து 470 கி.மீ. தொலைவில் புயல் நிலைக்கொண்டுள்ளது. இந்தப் புயல் நாளை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதனால். சென்னையில் நேற்று இரவு முதலே தொடர்ந்து மழை பெய்துவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழைக்கு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!
எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?