சென்னை கடற்கரையில் இந்தோ-பசிபிக் ஹம்ப்பேக் டால்பின்கள்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

Published : Mar 07, 2023, 11:21 PM ISTUpdated : Mar 07, 2023, 11:25 PM IST
சென்னை கடற்கரையில் இந்தோ-பசிபிக் ஹம்ப்பேக் டால்பின்கள்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

சுருக்கம்

சென்னை நீலாங்கரை கடற்கரையில் இந்தோ-பசிபிக் ஹம்ப்பேக் டால்பின்கள் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சென்னை நீலாங்கரை கடற்கரையில் இந்தோ-பசிபிக் ஹம்ப்பேக் டால்பின்கள் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை நீலாங்கரை குப்பத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான TREE அறக்கட்டளை, கடற்கரையில் இந்தோ-பசிபிக் ஹம்ப்பேக் டால்பின்கள் தெற்கு - ஈஞ்சம்பாக்கம் நோக்கி நீந்துவதைக் கவனித்துள்ளது. இதுக்குறித்து அந்த அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான சுப்ரஜா தாரினி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

இதையும் படிங்க: மீண்டும் ஊருக்குள் படையெடுக்கும் காட்டு யானைகள்; பொதுமக்கள் அச்சம்

Photos credits: TREE foundation

இதுக்குறித்து அந்த அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான சுப்ரஜா தாரினி கூறுகையில், நீலாங்கரை கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் 30-40 டால்பின்கள் காணப்பட்டன. அவை உணவு உட்கொண்டு ஒன்றோடு ஒன்று விளையாடிக்கொண்டிருந்தது. எங்கள் படகு அவற்றை நெருங்கியதும் படகின் இஞ்சினை நிறுத்தி விட்டு அவற்றிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் டால்பின்களை கவனித்தோம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரூரில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட மாநகராட்சி அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்

Photos credits: TREE foundation

மேலும் அவை வெவ்வேறு நிறங்களில் இருந்ததையும் காண முடிந்தது. ஒவ்வொரு டால்பினுக்கும் உடலிலும் முதுகுத் துடுப்பிலும் தனித்த நிறங்கள் இருந்தன. இளஞ்சிவப்பு மற்றும் சாம்பல் நிற நிழல்கள் ஒவ்வொரு டால்பினுக்கும் இருந்தன என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இதுக்குறித்த புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அவை இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!