சென்னையில் 3 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை..! உஷார் மக்களே..!

By Manikandan S R SFirst Published Nov 28, 2019, 12:16 PM IST
Highlights

நவம்பர் 30 , டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார். இலங்கை தெற்கு கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியதை அடுத்து மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கியது. இடையில் வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவான புயல்களால் தமிழகத்தின் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு மழையின் அளவு குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் வெப்பசலனம் மற்றும் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. இது மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக்காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

நவம்பர் 30 , டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார். இலங்கை தெற்கு கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவில் இருந்து சென்னையில் கனமழை பெய்து வந்த நிலையில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 15 சென்டிமீட்டர் அளவு மழை பெய்திருக்கிறது.

click me!