அதிர்ச்சி செய்தி... வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் அருண் மாரடைப்பால் உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Nov 16, 2020, 3:18 PM IST
Highlights

மிகவும் பிரபலமான வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் ஏ.எம்.அருண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் பிரபலமான வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் ஏ.எம்.அருண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மருத்துவமனையான வாசன் ஐ கேர். திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட இக்குழுமத்தின் கிளைகள் 170 இடங்களில் கண் மருத்துவமனைகளையும், 27 பல் மருத்துவமனைகளையும் கொண்டுள்ளது. இதன் உரிமையாளர் ஏ.எம்.அருண் (52). இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள வாசன் ஐ கேர் மருத்துவமனையின் உரிமையாளர் அருண் என்பவருக்கு இன்று காலை 8 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

click me!