என் மகன் போனாலும்.. ஏராளமான மகன்கள், மகள்கள் இருக்கிறார்கள்.. உருக்கமாக பேசிய சைதை துரைசாமி.!

Published : Feb 13, 2024, 11:27 PM ISTUpdated : Feb 14, 2024, 02:16 PM IST
என் மகன் போனாலும்.. ஏராளமான மகன்கள், மகள்கள் இருக்கிறார்கள்.. உருக்கமாக பேசிய சைதை துரைசாமி.!

சுருக்கம்

என் மகன் போனாலும் எனக்கு நிறைய மகன்கள் மகள்களும் இங்கே வந்து இருக்கிறார்கள் என்று மகன் வெற்றி தகனம் செய்யப்பட்ட பிறகு சைதை துரைசாமி உருக்கமாக பேசியுள்ளார்.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்லஜ் நதியில் விழுந்த காரில் இருந்து காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சட்லெஜ் ஆற்றில் மாயமான வெற்றி துரை சாமி சடலமாக மீட்கப்பட்டார்.

விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்தது. வெற்றியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று மாலை சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

​​​​

ஒருமுறை சார்ஜ் செய்தால் 190 கிமீ தூரம் பயணிக்கலாம்.. புதிய எலக்ட்ரிக் பைக் வாங்க அருமையான வாய்ப்பு..

வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

வெற்றி துரைசாமி உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மதிமுக தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

மகனை அடக்கம் செய்த பின்னர் பேசிய சைதை துரைசாமி, “என் மகன் போனாலும் எனக்கு நிறைய மகன்கள் மகள்களும் இங்கே வந்து இருக்கிறார்கள். எனக்கு ஒரு மகன் போனாலும், எனக்கு பக்க பலமாக எனக்கு நிறைய மகன்கள் இருக்கிறார்கள் என்ற மன வலிமையுடன் இருக்கிறேன் என்று உருக்கமாக பேசினார் சைதை துரைசாமி.

குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!