திருமணமான 38 நாட்களில் இன்ஜினீயர் கணவருக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி..!

By vinoth kumarFirst Published Dec 12, 2019, 3:40 PM IST
Highlights

சென்னையில் திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னையில் திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சென்னை சிறுசேரியில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா (27). இருவருக்கும் கடந்த மாதம் 3-ம் தேதி சேலம் மாவட்டம் அந்தியூரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு புதுமண தம்பதி சென்னை மேடவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.  

இந்நிலையில், கணவர் ராமலிங்கம் வழக்கும் போல வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் உள்ள மின்விசிறியில் புடவையால் மீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட ராமலிங்கம் அதிர்ச்சியடைந்து கதறினார். உடனே இதுதொடர்பாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மீனாவுக்கும் ராமலிங்கத்துக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்குப் பிறகு மனைவியை அழைத்துக் கொண்டு ராமலிங்கம் சென்னை வந்துள்ளார். ஆனால், இந்த திருமணத்தில் மீனாவுக்கு விருப்பம் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், அவரது செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர். திருமணம் நடந்து 38 நாள்களுக்குள் மீனா, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!