மது பிரியர்களுக்கு ஷாக்... 23-ம் தேதி சரக்கு கிடையாது..! தேர்தல் ஆணையம் அதிரடி..!

Published : May 21, 2019, 03:44 PM IST
மது பிரியர்களுக்கு ஷாக்... 23-ம் தேதி சரக்கு கிடையாது..! தேர்தல் ஆணையம் அதிரடி..!

சுருக்கம்

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ம் தேதி இரவு 12 மணி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ம் தேதி இரவு 12 மணி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதியன்று மக்களவைத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த 19-ம் தேதியன்று அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எந்த கலவரமும் நடைபெறாமல் இருக்க முன்னேச்சரிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினமான மே 23-ம் தேதி அன்று இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவிட்டுள்ளார். இதனால் மது பிரியர்கள் முன்னேச்சரிக்கையாக சரக்கு வாங்கி வைத்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

ராயபுரம் ரணகளம்: மாஜி அமைச்சரின் 'ரீ-என்ட்ரி'..! மிரள வைக்கும் ரிப்போர்ட் கார்டு..!
காலையிலேயே தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி! ரூ.2640 குறைந்தும்.. வாங்க தயங்கும் பொதுமக்கள்! என்ன காரணம் தெரியுமா?