போலி இ-பாஸ் தயாரிப்பு.. தலைமை செயலக ஊழியர் உட்பட 5 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்..!

Published : Jun 24, 2020, 03:41 PM ISTUpdated : Jun 24, 2020, 05:11 PM IST
போலி இ-பாஸ் தயாரிப்பு.. தலைமை செயலக ஊழியர் உட்பட 5 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்..!

சுருக்கம்

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்துக் கொடுத்த தலைமைச் செயலக ஊழியர், சென்னை மாநகராட்சி ஊழியர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்துக் கொடுத்த தலைமைச் செயலக ஊழியர், சென்னை மாநகராட்சி ஊழியர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஆகையால், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமானால் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் இ-பாஸ் முறை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையை விட்டு வெளியேற வேண்டுமானால் இ-பாஸ் இல்லாமல் வெளியே முடியாது. 

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக போலி இ-பாஸ் தயாரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவுத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இ-பாஸ்களை முறைகேடாக தயாரித்து பலருக்கும் விற்றிருப்பது தெரியவந்துள்ளது. அதில் ஒருவர் தலைமைச் செயலக ஊழியர் என்ற தகவலும் வெளியானது. 

இதனையடுத்து போலி இ-பாஸ் தயாரித்து வழங்கிய தலைமைச் செயலக ஊழியர், சென்னை மாநகராட்சி ஊழியர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த போலி இ-பாஸ்  3000 முதல் 5000 வரை விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

பொங்கல் பண்டிகை அதுவுமா! மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
சென்னையை சுற்றி பார்க்க சூப்பர் வாய்ப்பு.. 50 ரூபாய் இருந்தால் போதும்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!