சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 64 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ள நிலையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 214 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மண்டலம் வாரியாக
திருவொற்றியூர் - 4, மணலி - 0, மாதவரம் - 3, தண்டையார்ப்பேட்டை - 20, ராயபுரம் - 64, திரு.வி.க நகர் - 31 அம்பத்தூர் - 0, அண்ணா நகர் - 22, தேனாம்பேட்டை - 18, கோடம்பாக்கம் - 24, வளசரவாக்கம் - 5, ஆலந்தூர் - 3 அடையார் - 7, பெருங்குடி - 7, சோழிங்கநல்லூர் - 4 மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 4
ஏப்ரல் 16 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 214 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.