கொரோனா பாதிப்புடன் ஓட்டம் பிடித்த டெல்லி இளைஞரை சுற்றி வளைத்து பிடித்த போலீஸ் !

Published : Apr 14, 2020, 07:59 PM ISTUpdated : Apr 14, 2020, 08:09 PM IST
கொரோனா பாதிப்புடன் ஓட்டம் பிடித்த டெல்லி இளைஞரை சுற்றி வளைத்து பிடித்த போலீஸ் !

சுருக்கம்

கடந்த மாதம் புதுவைக்கு வேலை தேடி வந்த, டெல்லியை சேர்ந்த 31 வயது இளைஞர் , திடீர் என உடல் நல பிரச்சனையின் காரணமாக விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை முதலில் பரிசோதித்த மருத்துவர்களும், சுகாதார துறையினரும் நோய் தொற்று இல்லை என கூறி டிஸ்சார்ஜ் செய்தனர்.  

கடந்த மாதம் புதுவைக்கு வேலை தேடி வந்த, டெல்லியை சேர்ந்த 31 வயது இளைஞர் , திடீர் என உடல் நல பிரச்சனையின் காரணமாக விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை முதலில் பரிசோதித்த மருத்துவர்களும், சுகாதார துறையினரும் நோய் தொற்று இல்லை என கூறி டிஸ்சார்ஜ் செய்தனர்.

பின்னர் இவருடைய ரத்தமாதிரியின் ரிப்போர்ட் வந்த போது, இந்த இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 


வெளியே சென்ற அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் டெல்லி இளைஞர் மூலம் பலருக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பும் ஏற்பட்டது. 

இதனால் அவரை தேட 4 தனி படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். விழுப்புரம், காஞ்சிபுரம், போன்ற பல இடங்களில் இவரின் போஸ்டர் ஒட்டப்பட்டு இவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி ஓட்டம் பிடித்த இவரை, செங்கல்பட்டு அருகே தனி படை போலீசார் சுற்றி வளைத்து  பிடித்து கைதுசெய்துள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!