அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... தமிழகத்தில் 27 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று... ஒரே நாளில் 241 பேர் பலி...!

By Kanimozhi PannerselvamFirst Published May 8, 2021, 7:59 PM IST
Highlights

சென்னையில் மட்டும் கடந்த ஒரே நாளில் 6 ஆயிரத்து 846 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

​கொரோனா நிலவரம் குறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையின் படி,  தமிழகத்தில் இன்று மட்டும் 1,55,998  மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 27, 384 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 13 பேரும் அடக்கம்.  இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 51ஆயிரத்து 362ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் மட்டும் கடந்த ஒரே நாளில் 6 ஆயிரத்து 846 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 83 ஆயிரத்து 888 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 38 லட்சத்து 54 ஆயிரத்து 797 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால்  241 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 15, 412 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 151 பேரும், தனியார் மருத்துவமனையில் 90  பேரும் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் மட்டும் 23 ஆயிரத்து 110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இதனால் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிகை 11 லட்சத்து 96 ஆயிரத்து 549 ஆக அதிகரித்துள்ளது. 
 

click me!