#BREAKING தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. எங்கும் மரண ஓலம்.. எகிறும் உயிரிழப்பால் அலறும் பொதுமக்கள்.!

By vinoth kumarFirst Published May 17, 2021, 8:19 PM IST
Highlights

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 335ஆக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 335ஆக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில் 33,075 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,31,291ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 6,150 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,371ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மட்டும் 1,56,278 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 2,52,73,493 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில் 18,719 பேர் ஆண்கள், 14,356 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 9,75,262 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 6,55,991 ஆகவும் அதிகரித்து உள்ளது.

இன்று மட்டும் 20,486 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 13,81,690ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 335 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 152 பேர் தனியார் மருத்துவமனையிலும், 183 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் 86 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 18,005ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,31,596 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

click me!