Power Shutdown in Chennai:சென்னையில் முக்கிய பகுதிகளில் இன்று கரண்ட் கட்.. முன்னேற்பாடு செஞ்சிக்கோங்க..

By vinoth kumarFirst Published Nov 11, 2022, 8:49 AM IST
Highlights

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மாடம்பாக்கம், இருளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு?

 

மாடம்பாக்கம்:

படுவாஞ்சேரி, அகரம் அன்னை சத்திய நகர், வெல்கம் காலனி பிள்ளையார் கோயில் தெரு, குறிஞ்சி நகர் லட்சுமி நகர், கஸ்பாபுரம் 1 பகுதி கோகுல் நகர், கணேஷ் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள். 

இருளிப்பட்டு:

அழிஞ்சிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனபசத்திரம், பி.பி.ரோடு, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர் பகுதிகள் அடங்கும். 

பஞ்செட்டி:

அரசூர், பெரியகாவனம், வெள்ளோடை, தேவதானம், அனுப்பம்பட்டு, கோடூர், இருளிப்பட்டு, ஜானப்பச்சத்திரம், , ஜெகநாதபுரம், தச்சூர், சத்திரம், அனாதார்குப்பம், மாதவரம், ஆமூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  மின் கட்டணத்தை 10% குறைத்த தமிழக அரசு.. யாருக்கு, எவ்வளவு தெரியுமா ? முழு விபரம்

click me!