Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை? எங்க கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!

Published : Jan 23, 2023, 08:40 AM IST
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை? எங்க கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!

சுருக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், கே.கே.நகர், அம்பத்தூர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

போரூர்: 

ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் 2வது மற்றும் 3வது மெயின் ரோடு, வெங்கடேஸ்வரா 3, 7, 11வது மற்றும் 12வது தெருக்கள்.

கே.கே.நகர்

சூளைமேடு, தசரதபுரம், கோடம்பாக்கம், நல்லங்குப்பம், சாலிகிராமம், அசோக் நகர், விருகம்பாக்கம், கே.கே. நகர், எம்.ஜி.ஆர். நகர்
 
அம்பத்தூர்: 

அம்பத்தூர் பொன்னியம்மன் நகர், ராஜன்குப்பம், மெட்ரோ சிட்டி பேஸ் 1 மற்றும் 2, கஸ்தூரி நகர், ஜே.ஜே. தெரு

தண்டையார்பேட்டை: 

திருவெள்ளவயல், நெய்தவயல், காட்டூர் கடப்பாக்கம், கருங்காலி, மொரட்டு, கல்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!