Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று பவர் கட்.. இதோ பெரிய லிஸ்ட்..!

Published : Feb 23, 2023, 08:37 AM IST
Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று பவர் கட்.. இதோ பெரிய லிஸ்ட்..!

சுருக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்லாவரம், அம்பத்தூர், போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
 
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

பல்லாவரம்:

பாரதி நகர், துலுக்கநாதம்மன் கோவில் தெரு, கபிலர் தெரு, வைத்தியர் தெரு, மாடம்பாக்கம் திருவாஞ்சேரி கிராமம், அகரம் மெயின் ரோடு, ஸ்ரீ சாய் நகர், சத்தியமூர்த்தி நகர்.

போரூர்:

மல்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், தரப்பாக்கம் சாலை, விசாலாக்ஷி நகர், லட்சுமி நகர், 40 அடி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, டிரங்க் சாலை, ஆர்.இ.நகர், கிருஷ்ணா நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, சாண்டோஸ் நகர், முத்துமாரியம்மன் நகர், மங்கள நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, திருவீதியம்மன் கோயில் தெரு, பூந்தமல்லி டிரங்க சாலை, வைத்தீஸ்வரன் கோயில் தெரு, புது தெரு, நண்பர்கள் நகர், வசந்தபுரி, பெரியார் நகர், பவித்ரா நகர், வி.ஜி.என். நகர், ஜீவா நகர், திருமுடிவாக்கம் 5, 6, மற்றும் 14-வி மெயின் ரோடு, திருமுடிவாக்கம் சிட்கோ, கோவூர் தண்டலம், மணிமேடு, தாப்பாக்கம், குன்றத்தூர், ராம்நகர், சத்யா நகர், செம்பரம்பாக்கம் மேப்பூர், அகமீல், மலையம்பாக்கம்.

அம்பத்தூர்:

டி.ஐ. சைக்கிள் எம்.டி.எச். சாலை, டீச்சர்ஸ் காலனி, எம்.கே.பி.நகர், சிவானந்தா நகர், அன்னை சத்யா நகர், வானகரம் சாலை.

பெரம்பூர்:

ராஜீவ் காந்தி நகர் தெற்கு மாடி சாலை, திரு. வி.கே. 1வது மற்றும் 2வது தெரு, நாராயண மேஸ்திரி 1வது மற்றும் 2வது தெரு.

கே.கே.நகர்:

அசோக் நகர், கோடம்பாக்கம், சூளைமேடு, வளசரவாக்கம், சின்மயா நகர், 100 அடி சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!