Power Shutdown in Chennai: சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் இன்று மின்தடை தெரியுமா? இதோ பெரிய லிஸ்ட்.!

Published : Feb 07, 2023, 08:03 AM IST
 Power Shutdown in Chennai: சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் இன்று மின்தடை தெரியுமா? இதோ பெரிய லிஸ்ட்.!

சுருக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சோழிங்கநல்லூர், ஐயப்பந்தாங்கல் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
 
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

ஏழு கிணறு:

நாட்டுப் பிள்ளையார் கோயில் தெரு, ராமகிருஷ்ணா தெரு, முத்து நாய்க்கன் தெரு, அம்மன் கோயில் தெரு, நாகமணி, பிவி ஐயர் தெரு, பிஜி சர்ச் தெரு, ஆசிர்வாதபுரம், ராமசாமி தெரு, மலையப்பன் தெரு, வைத்தியநாதன் தெரு, கே.என். டேங்க் தெரு, முல்லா சாகிப் தெரு, முருகேசன் தெரு, கண்ணையன் தெரு உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

சோழிங்கநல்லூர்:

எல்காட் அவென்யூ ரோடு, நெடுஞ்செழியன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, டிஎன்எச்பி ஃபுல் ஏரியா, ஓஎம்ஆர், திருவள்ளுவர் சாலை, ஜவஹர் நகர், நேரு தெரு, அண்ணா தெரு, எழில் நகர் மற்றும் எம்ஜிஆர் தெரு.

ஐயப்பந்தாங்கல்:

காட்டுப்பாக்கம், ஸ்ரீ நகர், ஜானகியம்மாள் நகர், சீனிவாசபுரம், மாருதி நகர், ஆயில் மில் சாலை, வசந்தம் நகர் மற்றும் விஜயலட்சுமி அவென்யூ.

பெரம்பூர்:

செம்பியம் - காவேரி சாலை 1 முதல் 8வது தெரு, தொண்டியார்பேட்டை உயர் சாலை, பெரம்பூர் உயர் சாலை, கொடுங்கையூர் முழுப் பகுதி, ஜிஎன்டி சாலை மற்றும் மாதவரம் உயர் சாலை  மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!