Power Shutdown in Chennai: அச்சச்சோ.. சென்னையில் இன்று இந்த ஏரியாவுல கரண்ட் கட்..!

By vinoth kumarFirst Published Dec 5, 2022, 7:18 AM IST
Highlights

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சோழிங்கநல்லூர், ஓஎம்ஆர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

ஐடி காரிடார் பகுதி: 

சோழிங்கநல்லூர் கே.கே.சாலை, கிராம நெடுஞ்சாலை, நாராயண பள்ளி, ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரி காவல் நிலையம் முதல் பூர்விகா மொபைல்ஸ் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!