Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் இன்று முக்கிய ஏரியாக்களில் கரண்ட் கட்.. இதோ லிஸ்ட்.!

By vinoth kumarFirst Published Dec 3, 2022, 7:58 AM IST
Highlights

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

தாம்பரம்: 

பெரும்பாக்கம் சாந்தி நகர், வேளச்சேரி பிரதான சாலை, புஷ்பா நகர், ரங்கநாதபுரம் பகுதி முழுவதும்.

கடப்பேரி: 

மணிநாயக்கர் தெரு, துர்க்கையம்மன் தெரு, குளக்கரை தெரு, லட்சுமிபுரம், பாரதிதாசன் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் அடங்கும்

கிண்டி: 

ராஜ்பவன் கன்னியம்மன் கோயில் தெரு, பாரதியார் தெரு, ராமாபுரம் காந்தி நகர், ராஜிவ்காந்தி நகர், சஞ்சீ அவென்யூ வானுவம்பேட்டை முத்தையால் நகர், பாண்டியம்மன் கோயில் தெரு. 

ஆதம்பாக்கம்: 

ஏரிக்கரை தெரு, பாலகிருஷ்ணாபுரம் மெயின் ரோடு, ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை, டீச்சர்ஸ் காலனி, நங்கநல்லூர் 100 அடி சாலை, கன்னிகா காலனியின் ஒரு பகுதி, மடிப்பாக்கம் ஷீலா நகர், தனகல் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

IT காரிடார்: 

சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சோழிங்கநல்லூர் பகுதி, கணேஷ் நகர், எம்ஜிஆர் தெரு, எழில் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!