சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயங்கர தீ விபத்து... 3 பேருந்துகள் எரிந்து நாசம்..!

By vinoth kumarFirst Published Aug 23, 2020, 1:51 PM IST
Highlights

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பேருந்துகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 3 பேருந்துகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பேருந்துகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 3 பேருந்துகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.

சென்னை கோயம்பேடு தனியார் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது.  இதனால், பேருந்துகள் பல மாதங்களாக ஓடாமல் உள்ளன.

இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  3  பேருந்துகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து, ஆம்னி உரிமையாளர்கள் தரப்பில் தீயணைப்புத்துறையினருக்கும் மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், 4 இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனால், தீயில் 3 பேருந்துகள் முற்றிலுமாக எரிந்துவிட்டன. இதில், எரியக்கூடிய பொருட்கள் பேருந்துகளில் இல்லை. ஆனால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் எப்படி தீ பற்றியது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!