என் மரணத்திற்கு அவங்க தான் காரணம்.. சும்மா விட்டுடாதீங்க.. கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை..!

By vinoth kumarFirst Published Jun 27, 2021, 2:42 PM IST
Highlights

கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் ஜோதிஸ்ரீ பாலமுருகனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அதன் பின்னர் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஜோதிஸ்ரீ திருமுல்லைவாயலில் உள்ள கணவர் பாலமுருகன் வீட்டுக்கு மீண்டும் வந்தார். அப்போது, மாமியார் அம்சா வீட்டுக்குள் அனுமதிக்காமல் தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. 

சென்னை திருமுல்லைவாயிலில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த பாலமுருகனுக்கும், எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஜோதிஸ்ரீ என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பேசியபடி நகை, பணம் வரதட்சணையாக வழங்கப்பட்டது. ஆனால், திருமணத்திற்கு பிறகு கணவன் பாலமுருகன், மாமியார் அம்சா ஆகியோர் சேர்ந்து தாங்கள் வீட்டுக் கடன் வாங்கி உள்ளோம். எனவே தங்களுக்கு பணம் தேவைப்படுகிறது உனது பெற்றோரிடம் சென்று பணம் வாங்கி கொண்டுவா என கூறி கொடுமைப்படுத்தியுள்ளனர். 

இதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் ஜோதிஸ்ரீ பாலமுருகனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அதன் பின்னர் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஜோதிஸ்ரீ திருமுல்லைவாயலில் உள்ள கணவர் பாலமுருகன் வீட்டுக்கு மீண்டும் வந்தார். அப்போது, மாமியார் அம்சா வீட்டுக்குள் அனுமதிக்காமல் தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஜோதிஸ்ரீ வீட்டின் முதல் மாடிக்கு சென்றார். இதனால், ஆத்திரமடைந்த அம்சா, ஜோதிஸ்ரீ இருக்கும் அறைக்கு செல்லும் மின் வயரை துணடித்தார். இதனால், மனமுடைந்த ஜோதிஸ்ரீ வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜோதிஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை பெண்ணின் பெற்நோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அப்போது, போலீசார் விசாரணையில் ஜோதிஸ்ரீ  தற்கொலைக்கு கணவர் மற்றும் மாமியார் காரணம் என்பது தெரியவந்தது. மேலும், ஜோதிஸ்ரீ செல்போனில் இருந்து சில வீடியோக்கள் அழிக்கப்பட்டதை கண்டறிந்த போலீசார் அதனை ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் கைப்பற்றினர். அதில், தனக்கு பைத்தியக்காரி என்று பட்டம் சூட்டி கணவரும் மாமியாரும் செய்த கொடுமைகள் குறித்து தெரிவித்துள்ளார். தனது சாவுக்கு அவர்கள் இருவரும் தான் காரணம் என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் உருக்கமாக எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது. அதில், தமது தற்கொலைக்கு காரணமான தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை சும்மா விடக்கூடாது உருக்கமாக பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, 3 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

click me!