சாப்பாடு ஊட்டிய போது 3-வது மாடியில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை... நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி துடித்த தாய்..!

By vinoth kumarFirst Published Oct 6, 2019, 5:17 PM IST
Highlights

திடீரென கைத்தவறிய குழந்தை மாடியில் இருந்து கீழே விழுந்தது. இதனை கண்டு தாய் ஜெயஸ்ரீ அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு குழந்தையை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். 

சென்னையில் பால்கனியில் நின்று தாய் சாப்பாடு ஊட்டிய போது 3-வது மாடியில் இருந்து விழுந்த ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொண்டித்தோப்பு, சரவணமுதலி தெருவை சேர்ந்தவர் அருண். பாரிமுனையில் ஜவுளிக்கடை வைத்து உள்ளார். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களது ஒன்றரை வயது மகள் பூமி. இவர்கள் 3-வது மாடியில் வசித்து வந்தனர். இந்நிலையில், ஜெயஸ்ரீ குழந்தை பூமிக்கு பால்கனியில் நின்றபடி சாப்பாடு கொடுத்துக்கொண்டிருந்தார். 

அப்போது, திடீரென கைத்தவறிய குழந்தை மாடியில் இருந்து கீழே விழுந்தது. இதனை கண்டு தாய் ஜெயஸ்ரீ அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு குழந்தையை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.   

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கண் முன்பே குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தைகளை ஆபத்தான இடத்தில் வைத்து தாய்மார்கள் எந்த வேலையையும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!