தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குஷியான செய்தி.. போனஸ் மதிப்பெண்களை அறிவித்தது தமிழக அரசு..!

Published : May 28, 2020, 11:39 AM IST
தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குஷியான செய்தி.. போனஸ் மதிப்பெண்களை அறிவித்தது தமிழக அரசு..!

சுருக்கம்

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் தமிழ் வழி தேர்வெழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் தமிழ் வழி தேர்வெழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்குவதற்கு முன்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து முடிந்து விட்டது. ஆனால், கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் விடைத்தாள் திருத்தும் பணி தடைபட்டது. இதனிடையே, 4-வது கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில், மே 27-ம் தேதி முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 202 மையங்களில் மொத்தம் 38,108 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், பிளஸ்-2 வேதியியல் தேர்வில் தமிழ் வழி மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறுகையில்:- தமிழ் வினாத்தாள் கேள்வி ஒன்றில் புரதம் என்ற தமிழ் சொல்லுக்கு பதிலாக புரோட்டின் என ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்த்து வழங்கியதால் மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் அந்த கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே கூடுதல் மதிப்பெண்கள் உறுதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!