சந்திரயான் - 2 பயணம் திடீர் நிறுத்தம்

Published : Jul 15, 2019, 11:27 AM IST
சந்திரயான் - 2 பயணம் திடீர் நிறுத்தம்

சுருக்கம்

இன்று அதிகாலை ஏவப்பட இருந்த சந்திரயான் -2 பயணம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.

நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய இஸ்ரோ நிறுவனம் சந்திரயான் - 2 செயற்கைக்கோளை இன்று அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்தில் இருந்து ஏவுவதற்கு தயாராக இருந்தது. இதற்கான கவுன்டவுன் நேற்று காலை துவங்கியது.

இந்நிலையில் சற்று நேரத்தில் ஏவப்பட இருந்த சந்திரயான் - 2 விண்கலத்தில், திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து கவுன்டவுன் தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிய பிரச்சனையால் சந்திரயான் - 2 தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், பெரிய பின்னடைவு என்று சொல்ல முடியாது என்றும் விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.

பிஎஸ்எல்வி மார்க் - 3ல் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டரில் தெரிவித்துள்ளது. மீண்டும் சந்திரயான் - 2 ஏவப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

மகனுக்காக ராமதாஸ் கொடுத்த அசைவ விருந்து.! அப்பா மனக்காயத்திற்கு மருந்தான அன்புமணி கண்ணீர்.! அய்யா குடும்பம் ஒன்று சேர இதுதான் காரணம்.!
Chennai New Metro : சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! இனி 90 நிமிஷ பயணம் வெறும் 30 நிமிஷம்தான்!