சந்திரயான் - 2 பயணம் திடீர் நிறுத்தம்

Published : Jul 15, 2019, 11:27 AM IST
சந்திரயான் - 2 பயணம் திடீர் நிறுத்தம்

சுருக்கம்

இன்று அதிகாலை ஏவப்பட இருந்த சந்திரயான் -2 பயணம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.

நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய இஸ்ரோ நிறுவனம் சந்திரயான் - 2 செயற்கைக்கோளை இன்று அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்தில் இருந்து ஏவுவதற்கு தயாராக இருந்தது. இதற்கான கவுன்டவுன் நேற்று காலை துவங்கியது.

இந்நிலையில் சற்று நேரத்தில் ஏவப்பட இருந்த சந்திரயான் - 2 விண்கலத்தில், திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து கவுன்டவுன் தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிய பிரச்சனையால் சந்திரயான் - 2 தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், பெரிய பின்னடைவு என்று சொல்ல முடியாது என்றும் விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.

பிஎஸ்எல்வி மார்க் - 3ல் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டரில் தெரிவித்துள்ளது. மீண்டும் சந்திரயான் - 2 ஏவப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Chennai Power Cut: மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?