நான்கு நாட்களுக்கு பின் ஏற்றத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை .. - இன்றைய நிலவரம் ..

By Asianet TamilFirst Published Aug 24, 2019, 12:56 PM IST
Highlights

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நான்கு நாட்களுக்கு பிறகு இன்று உயர்ந்துள்ளது .
 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்க பட்டு வந்தது . அது  மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது .

அதுமுதல் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது . தினமும்  காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது .

அந்தவகையில் சென்னையில் இன்றைய ஒரு லிட்டர்  பெட்ரோல் விலை நேற்றை விட  +0.08 காசுகள் உயர்ந்து  74.70  ரூபாயாக உள்ளது . அதே போல ஒரு லிட்டர் டீசல் விலை  +0.05 காசுகள் உயர்ந்து  68.84 ரூபாயாக  விற்கப்படுகிறது .   

click me!