சுர்ஜித் நிச்சயமாக மீட்கப்படுவான்... நடிகர் சத்யராஜ் நம்பிக்கை!

By Asianet TamilFirst Published Oct 27, 2019, 9:55 PM IST
Highlights

ஆழ்துளை கிணற்றில் விழுந்து 52 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில் மீட்பு பணிகள்  தொடர்கின்றன. சிறுவன் சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என மதங்களைத் தாண்டி பிரார்த்தனைகள் நடைபெற்றுவருகின்றன. 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து போராடி வருகிறது. அந்தக் குழந்தையை மீட்பதற்காக அரசு எந்திரங்களும் போராடிவருகின்றன. ஆழ்துளை கிணற்றில் விழுந்து 52 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில் மீட்பு பணிகள்  தொடர்கின்றன. சிறுவன் சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என மதங்களைத் தாண்டி பிரார்த்தனைகள் நடைபெற்றுவருகின்றன. தீபாவளி திருநாளை தாண்டி தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் தங்களுடையை பிரார்த்தனையையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்திவருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்ற காணொலி வெளியிட்டுள்ளார். அதில், “இரண்டு வயது குழந்தை சுர்ஜித் நிச்சயமாக மீட்கப்படும் எனக் காத்திருக்கிறேன். குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது மிகவும் வேதனையான நிகழ்வு. நிச்சயமாக அந்தக் குழந்தை மீட்கப்பட வேண்டும். அந்த நல்ல செய்திக்காக அனைவருடன் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன். எல்லோரும் நம்பிக்கையுடன் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

click me!