சென்னையில் 8ம் வகுப்பு மாணவி 6 மாதம் கர்ப்பம்; 3 அண்ணன்களுக்கு போலீஸ் வலை

Published : Feb 29, 2024, 11:27 PM IST
சென்னையில் 8ம் வகுப்பு மாணவி 6 மாதம் கர்ப்பம்; 3 அண்ணன்களுக்கு போலீஸ் வலை

சுருக்கம்

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் 8ம் வகுப்பு மாணவி கர்ப்பம் தரித்த நிலையில் இது தொடர்பாக 3 இளைஞர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி பழைய வண்ணாரப்பேட்டை  திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்  நேற்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மகளை அழைத்துக் கொண்டு தந்தை இராயபுரம் அரசு ஆர் எஸ். ஆர். எம் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். 

காவிரி விவகாரம்: பாஜக, காங்கிரஸ் யார் ஆட்சி செய்தாலும் வஞ்சிக்கப்படுவது தமிழகம் தான் - பழனிசாமி பேச்சு

சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள்  சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மருத்துவமனை தரப்பில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் இராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு   சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையின் மனுவை தள்ளுபடி; நமது வலிமையான சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்ற என முதல்வர் பெருமிதம்

காவல் துறையினரின் விசாரணையில் கர்பமாக  இருப்பதற்கு அண்ணன் உறவு முறையான மனோஜ்(வயது 24), அஜய் (27), கண்ணா (22) என இவர்கள் மூவர் தான் காரணம் என தெரிவித்தார். இதனையடுத்து மனோஜை இராயபுரம் அனைத்து மகளிர் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 8ம் வகுப்பு சிறுமி 6 மாதம் கர்ப்பமாக உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!