
உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய ஆடவர் (காம்பவுன்ட்) அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி கால் பதித்துள்ளது.
உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது,
இந்தப் போட்டியில் அபிஷேக் வர்மா, சின்ன ராஜூ ஸ்ரீதர், அமான்ஜீத் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தனது அரையிறுதியில் 232 - 230 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்தது.
இந்திய அணி.இன்று நடைபெறும் இறுதிச் சுற்றில் கொலம்பியாவை சந்திக்கிறது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா - ஜோதி சுரேகா ஜோடி தங்களின் அரையிறுதியில் 152 - 158 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரிய ஜோடியிடம் தோல்வி கண்டதால் அபிஷேக் வர்மா - ஜோதி சுரேகா ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான பிளே ஆஃப் சுற்றில் அமெரிக்காவுடன் மோதுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.