உலக குத்துச்சண்டை: அதிரடி ஆட்டத்தால் காலிறுதியில் கால்பதித்த இந்திய வீரர்கள்

 
Published : Aug 29, 2017, 09:14 AM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
உலக குத்துச்சண்டை: அதிரடி ஆட்டத்தால் காலிறுதியில் கால்பதித்த இந்திய வீரர்கள்

சுருக்கம்

World Boxing Indian players went through the quarter-finals

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கெளரவ் பிதுரி, அமித் பாங்கல் ஆகியோர் தங்களது அதிரடி ஆட்டத்தால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் கெளரவ் பிதுரி 56 கிலோ எடைப் பிரிவில் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உக்ரைனின் மிக்கோலா பட்சென்கோவை மோதி அவரை தோற்கடித்தார்.

கெளரவ் பிதுரி தனது காலிறுதியில் டுனீசியாவின் பிலெல் மெகதியை சந்திக்கிறார்.

மற்றொரு இந்தியரான அமித் பாங்கல் 49 கிலோ எடைப் பிரிவில் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்த ஈகுவடாரின் கார்லோஸ் குய்போவுடன் மோதி அவரை தோற்கடித்தார்.

அமித் பாங்கல் காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் துஸ்மடோவை சந்திக்கிறார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்
Ind vs NZ: கோலி, ரோகித் இன்.. 3 வீரர்களுக்கு கல்தா கொடுத்த தேர்வு குழு..?