மகளிர் பிரிவில் இந்திய இரயில்வே அபார வெற்றி…

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 12:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
மகளிர் பிரிவில் இந்திய இரயில்வே அபார வெற்றி…

சுருக்கம்

தேசிய சீனியர் வாலிபால் போட்டியின் மகளிர் பிரிவில் இந்திய இரயில்வே அணி சாம்பியன் பட்டம் பெற்று அபார வெற்றிப் பெற்றது.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் இறுதிச்சுற்றில் இந்திய இரயில்வே அணி 25-21, 21-25, 25-15, 25-21 என்ற செட் கணக்கில் கேரள அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது.

மகளிர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் மகாராஷ்டிர அணி 25-15,
25-17, 25-9 என்ற நேர் செட்களில் ஆந்திர அணியைத் தோற்கடித்தது.

ஆடவர் பிரிவு இறுதிச்சுற்றில் கேரள அணி கடும் போராட்டத்துக்குப் பிறகு
25-17, 20-25, 26-24, 25-27, 15-9 என்ற செட் கணக்கில் இந்திய இரயில்வே அணியைத் தோற்கடித்தது.

ஆடவர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தமிழக அணி 20-25, 25-20, 34-32, 25-21 என்ற செட் கணக்கில் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Urvil Patel: லக்னோவை கதற விட்ட உர்வில் படேல்.. துண்டுச்சீட்டில் எழுதி இருந்த உருக்கமான செய்தி!
IPL 2026: இ-சிகரெட் முதல் போன் வரை.. வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட செக்! இனி இதுக்கெல்லாம் தடா!