
ஆசிய கிராண்ட்ப்ரீ பாரா தடகளப் போட்டியில் இந்தியா வீரர்கள் பதக்கம் வென்று பாரா உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றனர். தங்கம், வெண்கலம் என இந்தியா இரு பதக்கங்களை வென்றது.
ஆசிய கிராண்ட்ப்ரீ பாரா தடகளப் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் 200 மீ. ஓட்டத்தில் இந்திய வீரர்கள் ராமுத்ரி சோமேஷ்வர ராவ் மற்றும், ஹோகாட்டோவும் பங்கேற்றனர்.
இதில், ராமுத்ரி தங்கமும், ஹோகாட்டோ வெண்கலமும் வென்று அசத்தினர்.
இந்த வெற்றியின்மூலம் இவர்கள் இருவரும் பாரா உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.