விளையாட்டுத் துறை விருதுக்கான வீரர்களை தேர்வு செய்யும் குழுவில் வீரேந்திர சேவாக்…

Asianet News Tamil  
Published : Jul 28, 2017, 09:35 AM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
விளையாட்டுத் துறை விருதுக்கான வீரர்களை தேர்வு செய்யும் குழுவில் வீரேந்திர சேவாக்…

சுருக்கம்

Virender Sehwag oppointed as the selection committee for the sports department award.

விளையாட்டு துறையில் வழங்கப்படும் விருதுகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் இடம்பெற்றுள்ளார்.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்கள் ஆண்டு தோறும் மத்திய விளையாட்டு துறையால் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2017-ஆம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது பெறும் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே.தாக்கர் தலைமையில் 12 பேர் கொண்ட இந்த குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தடகள வீராங்கனை பி.டி.உஷா, குத்துச் சண்டை வீரர் முகுந்த் கிலேகர், கபடி வீரர் சுனில் தப்பாஸ், பாரா தடகள வீராங்கனை லதா மாத்வி உள்ளிட்டோரும் குழுவில் உள்ளனர்.  

இந்தக் குழு வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கூடி விருது பெறுபவர்கள் பட்டியலை இறுதி செய்கிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?