
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையில், ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி “பி” பிரிவில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பப்புவா நியூ குய்னா அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசத்தியது.
இதையடுத்து ஜிம்பாப்வே அணியையும் 10 விக்கெட் வித்தியாத்தில் இந்திய அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 154 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ஷப்னம் கில், ஹார்விக் தேசாயின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 21.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.
ஹார்விக் தேசாய், 73 பந்துகளில் 56 ரன்களும் ஷப்னம் கில், 59 பந்துகளில் 90 ரன்களும் அடித்தனர். இந்திய அணியின் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
பி பிரிவில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, காலிறுதியில் வங்கதேசத்துடன் ஆடுவதற்கான வாய்ப்பு உள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.