
டியான்ஜின் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் ரஷியாவின் மரிய ஷரபோவா சாம்பியன் வென்று அசத்தினார்.
டியான்ஜின் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நேற்று நடைப்பெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரஷியாவின் மரிய ஷரபோவா, பெலாரஸின் அரினா சபலென்காவுடன் மோதினார்.
இதில், 7-6, 7-6 (10-8) என்ற நேர் செட்டில் அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் மரிய ஷரபோவா.
இவர்கள் விளையாடிய இரண்டு செட்டிலும் தொடக்கத்தில் 1-4 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கினாலும் அதன் பிறகு சரிவை சமாளித்து மீண்டு எழுந்த ஷரபோவா இந்த வெற்றிக்காக 2 மணி 5 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.
ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 15 மாதங்கள் தடையில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் மறுபடியும் களம் திரும்பிய ஷரபோவா அதன்பிறகு வென்ற முதல் பட்டம் இது.
மொத்தத்தில் இது அவருக்கு 36-வது சர்வதேச பட்டமாகும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.