
இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச், ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் ஆகிய மூன்று பேரும் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 6-4, 7-6 (5) என்ற நேர் செட்களில் பிரிட்டனின் கைல் எட்மன்டை வீழ்த்தினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றிய ஜோகோவிச், அடுத்த செட்டில் 3-5 என்ற கணக்கில் பின்தங்கினார். இதனால் 2-ஆவது செட் எட்மன்ட் வசமாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பின்னர் அபாரமாக ஆடிய ஜோகோவிச், அந்த செட்டை டைபிரேக்கருக்கு கொண்டு சென்றார். அதில் அபாரமாக ஆடிய அவர் 7-6 (5) என்ற கணக்கில் 2-ஆவது செட்டை கைப்பற்றி வெற்றி அடைந்தார்.
ஜோகோவிச் தனது 3-ஆவது சுற்றில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டினை சந்திக்கிறார்.
ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தனது 2-ஆவது சுற்றில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஸ்டீபன் ராபர்ட்டை தோற்கடித்தார்.
அடுத்த சுற்றில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை சந்திக்கிறார் ஃபெடரர்.
ஸ்பெயினின் நடால் தனது 2-ஆவது சுற்றில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் குய்டோ பெல்லாவை வீழ்த்தினார்.
அடுத்த சுற்றில் சகநாட்டவரான பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை சந்திக்கிறார் நடால்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.