
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் 100 கோல்களை அடித்த முதல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ற பெயரை தனது வசமாக்கினார் ரொனால்டோ.
ஜெர்மனியின் மூனிச் நகரில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியின் காலிறுதியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பேயர்ன் மூனிச் அணியை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தின் 25-ஆவது நிமிடத்தில் பேயர்ன் அணியின் விடால் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் அனைத்தும் தலைகீழானது.
47-ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் ரொனால்டோ கோலடிக்க, ஸ்கோர் சமநிலையை எட்டியது.
61-ஆவது நிமிடத்தில் பேயர்ன் அணியின் ஜேவி மார்ட்டினிஸ் ரெட் கார்டு பெற்று வெளியேறினார். அதனால், அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரொனால்டோ 77-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோலை அடித்தார். அது வெற்றிக் கோலாக அமைந்தது. இதன்மூலம் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் 2 கோல்களை அடித்ததன் மூலம் சாம்பியன்ஸ் லீகில் 100 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமை ரொனால்டோ வசமானது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.