சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் 2024 – இந்தியாவின் சுமித் நாகல் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!

Published : Feb 09, 2024, 11:12 AM IST
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் 2024 – இந்தியாவின் சுமித் நாகல் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!

சுருக்கம்

சென்னையில் நடந்து வரும் ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 5 ஆம் தேதி சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் 4ஆவது சீசன் தொடங்கியது. இதில், லுகா நார்டி, சுமித் நாகல், டாலிபோர் ஸ்விரினா, உகோ பிளான்செட், ஸ்டெபனோ நபோலிடானோ, ராம்குமார் ராமநாதன், முகுந்த் சசிகுமார் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட டேரில் மிட்செல் – ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்?

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2ஆவது சுற்று போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் 7-5, 6-2 என்ற நேர்செட் கணக்கில் இத்தாலியைச் சேர்ந்த ஸ்டெபனோ நபோலிடானோவை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதற்கு முன்னதாக கடந்த மாதம் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2024 தொடரில் சுமித் நாகல் 2ஆவது சுற்றில் தரவரிசையில் ஏ சீடேடு அந்தஸ்து பெற்ற ஒரு வீரரை வீழ்த்தி 3ஆவது சுற்றுக்கு முன்னேறி 35 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக டென்னிஸ் வரலாற்றில் சாதனை படைத்தார்.

TNPL 2024: டிஎன்பிஎல் ஏலம் – நடராஜன் முதல் சாய் கிஷோர் வரையில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கபட்ட டாப் பிளேயர்ஸ்!

இதே போன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மற்றொரு போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த லுகா நார்டி 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெர்னார்ட் டாமிக்கை வீழ்த்தினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார்- சகெத் மைனெனி ஜோடி 7-6 (3), 6-4 என்ற நேர் செட்டில் சீன தைபே மற்றும் போலந்து ஜோடியான ராய் ஹோ – மாதுஸ்சிவ்ஸ்கியை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே போட்டி, ஐசிசி தரவ ரிசையில் நம்பர் 1 பிளேஸ்: புதிய உச்சம் தொட்டு வரலாற்று சாதனை படைத்த ஜஸ்ப்ரித் பும்ரா!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

ஹாரி ப்ரூக் ருத்ரதாண்டவம்.. மேஜிக் இன்னிங்ஸ்.. பாகிஸ்தானை பந்தாடி செமி பைனல் சென்ற இங்கிலாந்து!
ஏற்கனவே 3 டக் அவுட் – அபிஷேக் சர்மாவிற்கு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுக்க காரணம் என்ன?