
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இலங்கை அணி.
ஆறு மாதங்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் குவித்தபோதும், தென் ஆப்பிரிக்க அணியால் வெற்றி பெற முடியவில்லை.
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 63, ஹென்ரிக்ஸ் 41 ஓட்டங்கள் (34 பந்துகளில்) எடுத்தனர்.
இலங்கைத் தரப்பில் குலசேகரா, பிரசன்னா, சன்டகன், குணரத்னே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் டிக்வெல்லா 57 பந்துகளில் 68 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, வெற்றி எளிதானது.
பிரசன்னா 16 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்கள் குவிக்க, இலங்கை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்கள் குவித்து வெற்றி கண்டது.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இலங்கை வீரர் டிக்வெல்லா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.