
கோவை,
சீனியர் பிரிவில் உயரம் தாண்டுதலில் தேசிய சாதனையாக இருந்த 2.25 மீட்டர் உயரத்தை ஜூனியர் பிரிவில் 2.26 மீட்டர் தாண்டி புதிய சாதனைப் படைத்துள்ளார் தேஜஸ்வென் சங்கர்.
32–வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் வியாழக்கிழமை தொடங்கியது.
இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டெல்லியை சேர்ந்த தேஜஸ்வின் சங்கர் 2.26 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றதுடன் புதிய தேசிய சாதனையும் படைத்தார்.
மேற்கு வங்காள வீரர் ஹரி ஷங்கர் ராய் 2004–ம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த ஆசிய ஆல்–ஸ்டார் தடகள போட்டியில் 2.25 மீட்டர் உயரம் தாண்டியதே இதற்கு முன்பு இந்திய வீரர் ஒருவரின் தேசிய சாதனையாக இருந்தது.
அந்த 12 ஆண்டு கால தேசிய சீனியர் சாதனையை இப்போது 17 வயதான ஜூனியர் வீரர் தேஜஸ்வின் முறியடித்து வியக்க வைத்திருக்கிறார்.
தேஜஸ்வின் ஏற்கனவே காமன்வெல்த் இளையோர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.