
மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக நடைபெற்ற காலிறுதியில், போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் இந்தோனேஷியாவின் ஃபிட்ரியானி ஃபிட்ரியானியை எதிர்கொண்டார் சாய்னா.
இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக 40 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 21-15, 21-14 என்ற செட் கணக்கில் சாய்னா வெற்றி பெற்றார். இது, ஃபிட்ரியானிக்கு எதிராக சாய்னா பெற்றுள்ள 4-ஆவது வெற்றியாகும்.
சாய்னா தனது அரையிறுதியில் ஹாங்காங்கின் யிப் பூய் யின்னை சந்திக்கிறார். முன்னதாக 8 முறை யிப்பை சந்தித்துள்ள சாய்னா, அதில் 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.