அரையிறுதிக்கு முன்னேறினார் சாய்னா நெவால்…

Asianet News Tamil  
Published : Jan 21, 2017, 12:53 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
அரையிறுதிக்கு முன்னேறினார் சாய்னா நெவால்…

சுருக்கம்

மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னதாக நடைபெற்ற காலிறுதியில், போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் இந்தோனேஷியாவின் ஃபிட்ரியானி ஃபிட்ரியானியை எதிர்கொண்டார் சாய்னா.

இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக 40 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 21-15, 21-14 என்ற செட் கணக்கில் சாய்னா வெற்றி பெற்றார். இது, ஃபிட்ரியானிக்கு எதிராக சாய்னா பெற்றுள்ள 4-ஆவது வெற்றியாகும்.

சாய்னா தனது அரையிறுதியில் ஹாங்காங்கின் யிப் பூய் யின்னை சந்திக்கிறார். முன்னதாக 8 முறை யிப்பை சந்தித்துள்ள சாய்னா, அதில் 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து