திரும்பி வந்துட்டாரு சஹா.. ரிஷப் பண்ட்டின் நிலை..?

By karthikeyan VFirst Published Nov 11, 2018, 4:26 PM IST
Highlights

காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா காயத்திலிருந்து குணமடைந்துவிட்டார். 
 

காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா காயத்திலிருந்து குணமடைந்துவிட்டார். 

2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு அந்த இடத்தை பூர்த்தி செய்தவர் ரித்திமான் சஹா. தோனி போன்ற மிகப்பெரிய வீரரின் இடத்தை பூர்த்தி சஹா, விக்கெட் கீப்பிங்கிலும் பேட்டிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டார். அவ்வப்போது பேட்டிங்கில் சொதப்பினாலும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது சஹா காயமடைந்தார். அதனால் அந்த தொடரிலிருந்து பாதியில் வெளியேறினார். காயம் முழுவதுமாக குணமடையாத நிலையில், ஐபிஎல்லில் ஆடிய சஹா, மீண்டும் காயமடைந்தார். அதனால் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் ஆடும் வாய்ப்பை இழந்தார். 

இதற்கிடையே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஆடி திறமையை நிரூபித்துவிட்டார். அதன்மூலம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம்பிடித்து அதிலும் சிறப்பாக ஆடினார். ரிஷப் பண்ட் பேட்டிங் சிறப்பாக ஆடினாலும் அவரது விக்கெட் கீப்பிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பார்த்திவ் படேல் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே ரிஷப் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் பயன்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பார்த்திவ் படேல் இதுவரை கிடைத்த வாய்ப்புகளை தக்கவைத்துக்கொள்ளவில்லை. எனினும் வேறு வழியில்லாமல் அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், காயத்தால் அவதிப்பட்டு வந்த சஹா, அதிலிருந்து குணமடைந்துவிட்டார். முழுமையாக போட்டிகளில் ஆடும் அளவுக்கு உடற்தகுதி பெறாவிட்டாலும் காயத்திலிருந்து குணமடைந்துவிட்டார். வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். டிசம்பர் மாதத்தில் முழுமையாக குணமடைந்துவிடுவேன் என்றும் ரஞ்சி போட்டியில் ஆட உள்ளதாகவும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் சஹா தெரிவித்துள்ளார். 
 

click me!