
புரோ கபடி போட்டியின் 40-வது ஆட்டத்தில் குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி 35-21 என்ற புள்ளிகள் கணக்கில் புணேரி பால்டான் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.
புரோ கபடி போட்டியின் 40-வது ஆட்டம் லக்னெளவில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் முதல் 10 நிமிடத்தில் இரு அணி கேப்டன்களுமே புள்ளிகளை சேகரித்த நிலையில், தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதுடன், ரைடிலும் சிறப்பாக செயல்பட்ட குஜராத் அணி, முதல் பாதியில் 16-7 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற ஆட்டத்திலும் குஜராத்தின் கை ஓங்கியே இருந்ததால், இறுதியில் அந்த அணி 35-21 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.
குஜராத் தரப்பில் அதிகபட்சமாக அதன் ரைடர் சுகேஷ் ஹெக்டே, 4 புள்ளிகள் எடுத்தார். தடுப்பாட்டக்காரரான ஃபாஸல் அட்ராச்சலி 9 டேக்கிள் புள்ளிகளை அணிக்கு பெற்றுத் தந்தார்.
புணேரி தரப்பில், ரைடர் தீபக் ஹூடா 5 புள்ளிகளையும், தடுப்பாட்டக்காரர் சந்தீப் நர்வால் 4 புள்ளிகளையும் அதிகபட்சமாக பெற்றுத்தந்தனர்.
குஜராத் வீரர் ரோஹித் குலியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 13 ரைடு புள்ளிகள், 17 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், ஒரு கூடுதல் புள்ளி ஆகியவற்றை பெற்றது. புணேரி அணி, 11 ரைடு புள்ளிகள், 10 டேக்கிளி புள்ளிகள் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஒன்பது ஆட்டங்களில் மோதியுள்ள குஜராத் 6 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்ததுடன் ஒரு ஆட்டத்தை சமன் செய்து ஏ பிரிவு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
புணேரி அணி ஐந்து ஆட்டங்களில் மோதி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் ஏ பிரிவின் 2-வது இடத்தில் உள்ளது என்பது கொசுறு தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.