புரோ கபடி: பெங்களூரு புல்ஸிடம் போராடித் தோற்றது தமிழ் தலைவாஸ் அணி…

Asianet News Tamil  
Published : Aug 05, 2017, 10:02 AM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
புரோ கபடி: பெங்களூரு புல்ஸிடம் போராடித் தோற்றது தமிழ் தலைவாஸ் அணி…

சுருக்கம்

Pro Kabaddi Tamil talaivas team has lost to Bengaluru bulls

புரோ கபடி லீக் போட்டியின் 12-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியிடம் 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி போராடித் தோற்றது.

புரோ கபடி லீக் போட்டியின் 12-வது ஆட்டம் பெங்களூர் புல்ஸ் – தமிழ் தலைவாஸ் இடையே நாகபுரியில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய பெங்களூரு புல்ஸ் அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 23-8 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதனால் அந்த அணி அபார வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பின்னர் சரிவில் இருந்து மீண்ட தமிழ் தலைவாஸ் அணி அபாரமாக ஆடியது. ஆட்டத்தின் போக்கை மாற்றி தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்குர் தனது அபார ரைடால் புள்ளிகளைப் பெற்றுத்தர, பெங்களூருக்கு சிக்கல் ஏற்பட்டது.

எனினும், விடாப்பிடியாகப் போராடிய பெங்களூரு அணி இறுதியில் 32-31 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிக் கண்டது.

இதுவரை இரு ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது என்பது கொசுறு தகவல்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

நியூசிலாந்து ஓடிஐ தொடரில் 2 இந்திய 'ஸ்டார்' வீரர்களுக்கு ஓய்வு.. ரசிகர்கள் ஷாக்.. பிசிசிஐ முடிவு!
சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்