புரோ கபடி: முதல் அணியாக இறுதிச்சுற்றில் கால்பதித்தது குஜராத் ஃபார்சூன் ஜெயன்ட்ஸ்…

Asianet News Tamil  
Published : Oct 25, 2017, 09:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
புரோ கபடி: முதல் அணியாக இறுதிச்சுற்றில் கால்பதித்தது குஜராத் ஃபார்சூன் ஜெயன்ட்ஸ்…

சுருக்கம்

Pro Kabaddi Gujarat Fortune Giants of the First Team

புரோ கபடி லீக் போட்டியின் முதல் தகுதிச்சுற்றில் குஜராத் ஃபார்சூன் ஜெயன்ட்ஸ் அணி 42-17 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸை தோற்கடித்து முதல் அணியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளாது.

புரோ கபடி லீக் போட்டியின் முதல் தகுதிச்சுற்று மும்பையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் குஜராத் ரைடர் சச்சின் 9 ரைடு புள்ளிகளையும், தடுப்பாட்டக்காரர் பர்வேஷ் 4 டேக்கிள் புள்ளிகளையும் பெற்றனர்.

பெங்கால் அணியில் தீபக் நர்வால் 5 ரைடு புள்ளிகளையும், தடுப்பாட்டக்காரர் ஸ்ரீகாந்த் 4 டேக்கிள் புள்ளிகளையும் வென்றனர்.

குஜராத் அணி மொத்தமாக 21 ரைடு புள்ளிகள், 14 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல் ஔட் புள்ளிகள், ஒரு கூடுதல் புள்ளி பெற்றது.

பெங்கால் அணி 8 ரைடு புள்ளிகள், 7 டேக்கிள் புள்ளிகள், 2 கூடுதல் புள்ளிகள் பெற்றது.

இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடி முதல் பாதி நிறைவில் 13-10 என முன்னிலை பெற்றது குஜராத். பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தின் இறுதியிலும் 42-17 புள்ளிகளில் முன்னிலைப் பெற்று வென்றது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

'அவர் கதவைத் தட்டவில்லை, உடைக்கிறார்'; சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சர்பராஸ் கான் வேண்டும்: அஸ்வின்
ஆஷஸ் 2025: SCG டெஸ்டுக்குப் பிறகு உஸ்மான் கவாஜா ஓய்வு பெற 6 காரணங்கள்