
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் மேற்கு வங்கத்தை வீழ்த்தி தமிழக அனி அசத்தியுள்ளது.
சென்னையில் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி-68 நடைபெற்று வருகிறது. இதில் 6-ஆம் நாளான நேற்று மகளிர் பிரிவு ஆட்டத்தில் தமிழகம் 84-50 என்ற புள்ளிகள் கணக்கில் மேற்கு வங்கத்தை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக தமிழக தரப்பில் ஸ்ரீவித்யா 17 புள்ளிகளும், மேற்கு வங்கத்தில் சுகுமோனி 10 புள்ளிகளும் வென்றனர்.
மற்ற ஆட்டங்களில் உத்தரப் பிரதேசம் 69-54 என்ற கணக்கில் தெலங்கானாவையும், நடப்புச் சாம்பியன் கேரளா 63-42 என்ற கணக்கில் டெல்லியையும் வீழ்த்தின.
மற்றொரு ஆட்டத்தில் உத்தரப் பிரதேசம் 63-78 என்ற கணக்கில் கர்நாடகத்திடம் வீழ்ந்தது. சத்தீஸ்கர் 90-61 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தை வீழ்த்தியது.
ஆடவர் பிரிவு ஆட்டங்களில் சண்டீகர் 83-70 என்ற கணக்கில் கேரளத்தையும், சர்வீசஸ் 87-59 என்ற கணக்கில் குஜராத்தையும், பஞ்சாப் 70-68 என்ற கணக்கில் உத்தரகண்டையும் வீழ்த்தின.
இந்திய இரயில்வே 103-79 என்ற கணக்கில் ராஜஸ்தானையும், சர்வீசஸ் அணி மற்றொரு ஆட்டத்திலும் 90-70 என்ற கணக்கில் கர்நாடகத்தை வென்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.