Mi vs kkr: ipl 2022: சிஇஓவும் பங்கேற்றார்;இதை எப்படி வீரர்களிடம் சொல்வதென்றே தெரியல: ஸ்ரேயாஸ் அய்யர் விளக்கம்

Published : May 10, 2022, 01:27 PM ISTUpdated : May 10, 2022, 01:28 PM IST
Mi vs kkr: ipl 2022: சிஇஓவும் பங்கேற்றார்;இதை எப்படி வீரர்களிடம் சொல்வதென்றே தெரியல: ஸ்ரேயாஸ் அய்யர் விளக்கம்

சுருக்கம்

Mi vs kkr: ipl 2022 :நீங்கள் ப்ளேயிங் லெவனில் இன்றைய ஆட்டத்தில் இல்லை என்பதை சகவீரர்களிடம் எவ்வாறு சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. இதே நிலையை நானும் கடந்து வந்திருக்கிறேன் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்

நீங்கள் ப்ளேயிங் லெவனில் இன்றைய ஆட்டத்தில் இல்லை என்பதை சகவீரர்களிடம் எவ்வாறு சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. இதே நிலையை நானும் கடந்து வந்திருக்கிறேன் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. 

166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ரஸல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு துணையாகினர்.

இந்த வெற்றி மூலம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 12 போட்டிகளில் 5 வெற்றிகள் 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டது கொல்கத்தா அணி. அடுத்துவரும் 2 ஆட்டங்களையும் கொல்கத்தா அணி கட்டாயம் வெல்வது அவசியமாகும்.

இந்த ஆட்டத்தில் வெற்றிக்குப்பின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அணியில் ப்ளேயிங் லெவனைத் தேர்வு செய்வது கடினமானதாக இருந்தது. ஏனென்றால், ஐபிஎல் தொடங்கும்போதே நானும்கூட அந்தநிலையில்தான் இருந்தேன். 
பயிற்சியாளர்களுடன் ஆலோசித்தோம், அணித் தேர்வில் சிஇஓ வெங்கியும் சேர்ந்துதான் அணியைத் தேர்வு செய்தார். பயிற்சியாளர் மெக்கலம் அணி வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் சென்று ப்ளேயிங் லெவன்பற்றி தெரிவித்தார். 

சகவீரர்களிடம் சென்று நீங்கள் ப்ளேயிங் லெவனில் இல்லை என்றஉ நான் எவ்வாறு கூறுவது என தெரியவில்லை. ஆனால்,சூழலைப்புரிந்து கொண்டு வீரர்கள் ஆதரவாக இருந்தார்கள். கேப்டனாக இருப்பதிலும் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் விளையாடியவிதமும் பெருமையாக இருக்கிறது.

இதற்கு முன் நடந்த போட்டிகளில் நாங்கள் தோல்வி அடைந்திருக்கிறோம், கடந்த போட்டியில்கூட தோல்வி அடைந்தோம். மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்றாலும் மீண்டும் திரும்ப வந்திருக்கிறோம், மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றிருக்கிறோம்.
 இதைதான் எதிர்பார்த்திருந்தோம், இது எனக்கு மனநிறைவை அளிக்கிறது.பவர்ப்ளேயில் நல்ல தொடக்கம் கிடைத்தது, நிதிஷ் ராணாவும் ரன்களை வேகமாக ஸ்கோர் செய்தார். பொலார்ட் ஓவரில் ராணா அடித்த சிக்ஸர்கள் அருமையானது

இவ்வாறு ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷிக்கு 'இந்த' பலவீனம் இருக்கு! உண்மையை போட்டுடைத்த இந்திய அணி கோச்!
CWG 2026: பளுதூக்குதலில் வெள்ளியை தட்டித்தூக்கிய தமிழக வீரர்.. யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?