
மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 6-ஆம் நிலை வீரரான மரின் சிலிச், உலகின் 14-ஆம் நிலை வீரரான கெவின் ஆன்டர்சன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டி மகாராஷ்டிர மாநிலம், புணேவில் ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதில், உலகின் ஆறாம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், உலகின் 14-ஆம் நிலை வீரரான தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில், உலகத் தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் நான்கு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் மரின் சிலிச், ஆன்டர்சன், தரவரிசையில் 20-வது இடத்தில் இருக்கும் நடப்புச் சாம்பியன் ஸ்பெயின் வீரர் ராபர்டோ பெளதிஸ்டா அகுட், 42-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்தின் ராபின் ஹஸ் ஆகியோரும் அடங்குவர்.
இவர்கள் தவிர தரவரிசையில் 71-வது இடத்தில் இருக்கும் தைவானின் யென்-சன் லு, 77-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீரர்களான ஜெரிமி சார்டி, 81-வது இடத்தில் இருக்கும் பியரே ஹியூஜஸ் ஹெர்பர்ட், 91-வது இடத்தில் இருக்கும் கில்ஸ் சிமன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
சென்னையில் கடந்த 21 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டுவந்த இந்த டென்னிஸ் போட்டி, எதிர்வரும் சீசன் முதல் புணே நகருக்கு மாற்றப்பட்டது கொசுறு தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.